மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் சந்திப்பு

<!–

மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் சந்திப்பு – Athavan News

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இடம் பெற்று வருகின்ற கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆராயும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இதேவேளை மன்னார் மண்ணுக்கான போராட்டத்தில் மக்களுடன் மக்கள் விடுதலை முன்னணி என்றும் துணை நிற்கும் என்பதோடு மக்களுக்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன் நிற்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *