22வது திருத்தம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி !

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்து அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதே முதற் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே அவர்களின் எதிர்காலமும் தங்கியிருப்பதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *