மழையில் கலைந்த பெண்ணின் மேக்கப் போன்றது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எம்மால் திருப்தியடைய முடியவில்லை பல அலங்காரங்கள் ‘ மேக்கப் ‘ போட்டுக்கொண்டு சபைக்கு செல்லும் அலங்கோலமான பெண் மீது மழைபெய்துவிட்டால் அந்த அலங்காரங்களும் ‘ மேக்கப் ‘ புகளும் கலைந்தாள் அந்தப்பெண்ணின் உண்மையான தோற்றம் தெரிவதனைப் போன்றுதான் இந்த இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தை நாம் பார்க்கின்றோம் . ராஜ்பக்ச என்ற பழுதடைந்த ‘ கேக்’கின் மீது ‘ மக்களுக்கு நிவாரணம் ‘ என்ற ஐசிங்கை பூசியே இந்த வரவு – செலவுத்திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது .
மண்ணெண்ணெய் விலை 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது . பெற்றோல் 450 ரூபாவுக்கும் டீசல் 430 ரூபாவுக்கும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இது சம்பந்தமான விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை . அதே போன்று மின் வெட்டு அமுலாகும் நிலையில் அதற் கான மாற்று திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை .
டொலர் களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற விடயங்களும் இதில் இல்லை . பொருட்களின் விலை அதிகரிப்புக்களை கட்டுப்படுத் துவதற்கான திட்டங்களும் இதில் இல்லை வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கான எந்தவொரு திட்டமும் இதில் இல்லை.
மக்களுக்கான நிவா நிவாரணங்களும் இதில் இல்லை . இவ்வாறான நிலையில் சர்வ தேசத்திடம் அரசு தனது வீரத் தைக் காட்டும் நிலைப்பாட்டில் உள்ளது . ஆதி வாங்கியவன் காயத்தைக்காட்டித்தான் அனுதாபத்தைப்பெற வேண்டும் .
அண்ணல் இலங்கை ஆதி வாங்கிவிட்டு காத்தியாயி எடுத்து குத்துவேன் என்று சொல்கின்றது.பயங்கரவாததடைச்சட்டத்தை அமுல் படுத்தி சர்வதேசத்தைப் பகைக்கின்றது என்றார்.
பிற செய்திகள்