
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது ? சர்வதேச விசாரணை விரைவாக நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவேண்டும் – இவ்வாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு , கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ;
கடந்த 13 வருடங்களாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு , வீதி வீதியாகப் போராடிய எமது தாய்மார்கள் , உறவுகள் 138 பேருக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் .
ஆனால் இதுவரையில் எந்தவொரு நீதியுமே இதற்குக் கிடைக்கவில்லை . காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையில் சிறிலங்கா அரசில் எங்கள் எவருக்கும் எள்ளளவும் நம்பிக்கையில்லை எனவே எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் .
அந்த சர்வதேச விசாரணை உரிய சாட்சியங்களை ஆவணப்படுத்துவதனூடாக சர்வதேசத்தினுடைய ஏற்பாட்டிலே சர்வதேசத்தின் உத்தரவாதத்தினூடாக நடத்தப்படவேண்டும் .
இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையூடாக வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளுக்கான சர்வதேச நீதி கிடைக்கப்பெறவேண்டும் .
இதுவே எமது பிரதானமான கோரிக்கையாகும் .
அந்த வகையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரிலே இதற்கான ஏற்பாடுகளை அந்தக் கூட்டுரிமை நாடுகள் மேற்கொள்ளவேண்டும் .
அதிலும் பிரதானமாக 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை , மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் , போர்க்குற்றங் கள் ஆகியவற்றிலே ஈடுபட்டி ருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ச , கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட அரச உயர்மட்டத்தரப்புக்கள் , இராணுவ அதி காரிகள் , படைத்தளபதிகள் என அனைவருமே தனிநபர் களாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் .
அத்துடன் காலங்கடத்துகின்ற இந்த விவகாரத்தில் எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்கள் யாருமே துணைபோகாது அனைவரும் ஓரணியாக , தமிழர்களாக அத்தனை மாவீ ரர்களுடைய தியாகங்களுக்கும் , எமது தமிழ் மக்களின் அர்ப்பணிப்புக்கும் மதிப்புக் கொடுத்து அனைவரும் முன் னின்று செயற்படவேண்டும் -என்றார்.
பிற செய்திகள்