
கொழும்பு, செப் 3
இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 40 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க உணவு உதவிகளுக்கு மேலதிகமாக, மேலும் 20 மில்லியன் டொலர் பெறுமதியுடைய உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மற்றும் உலக உணவு திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோன் அயிலீஃப் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல் மற்றும் திரிபோஷா போன்ற தமது கூட்டுத் திட்டங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் ஏனைய நாடுகளுக்கு இத்திட்டங்கள் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.