
அம்பாறை, செப் 3
இலங்கைக்கு இந்தியா உணவுக் கப்பல்களை அனுப்பி உதவுகையில் சீனா உளவுக் கப்பலையே அனுப்புகின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அதேவேளை சபைக்குள் செங்கோலை எடுத்து வரும்போது எழுந்து நிற்காத அத்துரலிய ரதன தேரர், சீனாவிலிருந்து அந்த உளவுக் கப்பல் வரும்போது அங்கு சென்று அந்த உளவுக்கப்பலுக்கு மரியாதை வழங்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நாடு நெருக்கடிக்குள் சிக்கிய நேரத்தில் உதவிய நாடு இந்தியா மட்டுமே.கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது 04 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.
குறைந்த வட்டியில் 800 மில்லியன் டொலர் உணவுக்காகவும் மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வழங்கியிருக்கின்றது. கடனடிப்படையில் 700 மில்லியன் டொலரை எரிபொருளுக்காக வழங்கியியுள்ளது.இரசாயன உரத்துக்கு 55 மில்லியன் டொலர் வழங்க உதவியுள்ளது. ஆனால் இலங்கைக்கான கடனைக்கூட மறுசீரமைக்க முடியாதெனக் கூறும் சீனா இலங்கைக்கு உளவுக் கப்பலையே அனுப்பியது என்றார்.