முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நே்றறு நள்ளிரவு மீண்டும் நாட்டினை வந்தடைந்தார்.
இந்நிலையில் கோட்டபாய ராஜபக்சவிற்கு விமானநிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோட்டபாய ராஜபக்சவை வரவேற்க பொதுஜன பெரமுன அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துடன் கோட்டபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு பலத்த வரவேற்பை அளித்தனர்.
இவ்வாறான நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமான நிலையத்திலிருந்து கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவியும் வெளியேறினர்.
இந்நிலையில் சற்றுமுன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்சவின் அரச வசிப்பிடத்திற்கு சென்று அவருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பிற செய்திகள்