ராஜபக்ஷ குடும்பத்தினை எவ்வாறு பாதுகாப்பது என சிந்திக்கும் ரணில்- சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

மக்கள் ஆணை இல்லாத இந்த பாராளுமன்றத்தை கலைத்து,புதிய தேர்தல் மூலம் ஒரு நிலையான அரசாங்கத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும்.இது மூலமே நாடு நாடு முகங்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய அரசியல் ,பொருளாதார,சமூக பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் இதற்காக மக்கள் அணி திரள வேண்டும்.என ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வரவு செலவுத் திட்டம் என்பது -நாட்டு மக்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நாடடையும் மக்களையும் மீட்பதற்கான சட்ட திருத்தங்களைக் கொண்டுவருகின்ற ஒரு நடவடிக்கையாகும்.கடந்த 24 வருடங்களாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது நாட்டையோ ,மக்களையோ காப்பாற்றுவதற்கு பதிலாக வதைக்கின்ற ,நாட்டினை அந்நிய நாடுகளுக்கு விற்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதன் விளைவாகவே எங்களுடைய நாடு இன்று எங்களுக்கு இல்லாமல் பலதேசியக் கம்பனிகள் மற்றும் அந்நிய நாடுகள் ஆகியவற்றின் நாடாக மாறியுள்ளது.

அரச நிறுவனங்களை மறு சீரமைப்பதற்காக கூறிக்கொண்டு தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

பாராளுமன்றமானது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்றம் அல்ல.எனவே இந்த பாராளுமன்றத்தினை களைத்து விட்டு புதிய தேர்தல் மக்கள் ,ஆணைக்குச் செல்ல வேண்டும்.

பாராளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் 70 வயதிற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் ,ஆனால் சிந்திக்க முடியாது , வயது முதிர்ந்தவர்கள் என காரணம் சொல்லி அரச ஊழியர்களின் 65 ஓய்வு வயதெல்லையினை 60 ஆக குறைக்கின்ற சட்டத்தினை கொண்டுவரும் பொழுது அரசியல்வாதிகளுக்கும் ஒரு வயதெல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். எனவே இந்த பாராளுமன்றம் வயது முதிர்ந்த கிழடுகளின் பாராளுமன்றமாகும்.இளைஞர்கள்,யுவதிகளினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்றம் அல்ல.

தனது ஊடகப் பிரிவிற்கு அதிகமானோரை நியமித்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க ,இவர்களுக்கு 80 ஆயிரம் சம்பளம் வழங்குகின்ற பொழுது இது ரணிலின் அப்பனின் பணமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அவருடைய பாட்டனின் பணமாக இருந்தால் பிரச்சினை இல்லை .ஆனால் மக்களின் வரிப்பணத்தினைக் கொடுத்து தொகை கணக்கில்லாமல் இவ்வாறு நியமித்து சம்பளம் வழங்குகின்றார்.

இன்று VAT வரி 15 % ஆக அதிகரித்துள்ளது.இதனால் இறக்குமதி செய்யபப்டுகின்ற பொருட்களின் விலை அதிகரிப்பினை தவிர்க்க முடியாது.மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்று மரத்தில் இருந்து விழுந்த மக்களை மிதிக்கின்ற நபராக ரணில் விக்கிரமசிங்க மாறி இருக்கிறார்.

இலங்கையைக் காப்பாற்றுவதற்கு ,கட்டியெழுப்புவதற்கு IMF இனாலோ அல்லது ஏனைய நிறுவனங்களாலோ கடன் வாங்குவதன் மூலம் மாத்திரம் இந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என நாட்டின் புத்திஜீவிகள் அடித்து கூறுகிறார்கள். அதேபோல் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் மூலமும் தீர்வு காண முடியாது என்கிறார்கள்.

மக்கள் ஆணை இல்லாத,பணத்திற்காக விலை போன ,மக்களுக்கு எந்தவிதமான பொருக்கூறாமல் வதைக்கின்ற இந்த பாராளுமன்றம் களைக்கப்பட வேண்டும். புதிய தேர்தல் நடாத்தப்பட வேண்டும் .

ரணில் விக்கிரமசிங்க ,ராஜபக்ஷ குடும்பத்தினை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனைத் தவிர மக்கள் நலன் சார்ந்த எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவிக்கவில்லை.ஒரு நிலையான அரசாங்கத்தினை அமைத்து அதன் மூலம் நாடு முகங்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய ராசியில்,பொருளாதார,சமூக பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.இதற்காக மக்கள் அணி திரள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *