கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – நித்தவெல பிரதேசத்தில் பகுதியில் , கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதாவது, இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த, சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *