கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட “விசிட்டர்ஸ் நைட்” நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு மணித்தியால இரவு நடவடிக்கையில் 86 பேரும், ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த 20 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 28 பேரும், 51 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 4 பேரும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டிய 4 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய ஒருவரும், மற்ற போக்குவரத்து விதிகளை மீறிய 113 பேரும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்