யாழில் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளை இலவசமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு- இராமச்சந்திரன் கருத்து!

இந்து,பௌத்த கலாசாரப் பேரவை – வடக்கு மாகாணம் தலைமைக் காரியாலயத்தில் இன்று புதிய ஆங்கில வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான விஷேட ஆங்கில வகுப்பொன்றை நாங்கள் இலவசமாகக் கற்பிக்கின்றோம் என இந்து பெளத்த கலாச்சார பேரவையின் செயலாளர் தேசமானிய இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்றையதினம் யாழில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கற்கைநெறிக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு முதல் 3 மாதங்கள் ஆங்கிலமும் ,அதனைத்தொடர்ந்து யப்பான் ,கொரியா ,சீனா ,ஜேர்மன் போன்ற மொழிகளை இலவசமாகக் கற்பித்து அந்த நாடுகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடாக அவர்களின் அனுமதியுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக வழிகாட்டுகின்றோம்.

இந்து,பௌத்த கலாசாரப் பேரவையில் பல பேர் கற்றுள்ளார்கள் .அத்துடன் நிறைய பேர் வேலைவாய்ப்பினை பெற்று இருக்கிறார்கள்.வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த சேவையினை தொடர்ந்து வருகிறோம்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *