நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58இலட்சம் ரூபா கடனாளி!

நாட்டில் நிலவும் பணவீக்க முறையின் காரணமாக இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக விசேட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

அதன்படி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஆயிரத்து ஐம்பத்து ஆறாயிரம் கடனாளிகளாக மாறியுள்ளனர் என்றார்.

இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை, வங்கிகளில் தனிநபர்கள் கடன் வாங்குவது சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இதே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் (2019 முதல் 2022 மே வரை) தீவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கடன் தொகையும் சுமார் பதினேழாயிரத்து பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக கூறும் பேராசிரியர், தீவிலுள்ள ஒரு தனிநபரின் கடன் தொகையும் ( அந்த காலகட்டத்தில்) சுமார் நானூற்று அறுபத்து நான்காயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு 526 ரூபா கடனாளியாக இருப்பார்கள் என அந்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்படுவதால், அரசாங்கம் தீவில் உள்ள ஒவ்வொரு நபரின் கடனையும் நாளொன்றுக்கு சுமார் 270 ரூபாவினால் அதிகரிக்கின்றது எனவும் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்தபோது ஒவ்வொரு குடும்பமும் நாளொன்றுக்கு 2000 ரூபாய்க்கு மேல் கடனாளியாகி வருவது தெரியவந்தது.

இவ்வாறாக, தீவிலுள்ள ஒவ்வொரு நபரும் அரசாங்கத்தால் நாளொன்றுக்கு 1000 ரூபா கடனாளியாக்கப்படுவதும், அவர்கள் எடுக்கும் தனியார் கடனினால் ஒவ்வொரு குடும்பமும் நாளொன்றுக்கு மேலும் ஆயிரம் ரூபா கடனாளியாக மாறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *