தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணாக்க உழவர் எனும் பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தியிருந்தது.
மேற்படி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செயன்முறை வழிகாட்டற்கருத்தமர்வும் , விதைப்பொதிகள் விநியோகமும் இன்று சனிக்கிழமை நல்லூர் , சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் , ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப் பாளர் அற்புதச்சந்திரன் , விவசாய விஞ்ஞானி கலாநிதி அரசகேசரி கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினை மற்றும்உணவுக்கான நெருக்கடி ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டு , வீட்டுத்தோட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் , மேற்படி போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
மேற்படி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் , சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.




பிற செய்திகள்
- கோட்டாவின் மீள் அரசியல் பிரவேசம்! மகிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
- மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளில் மாற்றம்!
- வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! வெளியான அறிக்கை
- எம்.பிக்கள் செயற்படும் விதமே அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்! – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka