பாண் விலையேற்றம் ஏழைமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது-சபா.குகதாஸ் கவலை!

சாதாரண மக்கள் அன்றாட வருமானங்களை இழந்து அரசாங்கத்தின் நிவாராணங்கள் இன்றி வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நேரத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள்மூன்று வேளை உணவைத் தவிர்த்து இரண்டு வேளை உணவை அரை குறையாக உண்ணும் இந்த நேரத்தில் பாணிண் விலை 300 ரூபாயை தாண்டியமை மேலும் ஏழை மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களும் குழந்தைகளும் போசாக்கான உணவு இன்மையால் மந்த போசாக்கு நிலைக்கு நாளாந்தம் தள்ளப்படுகின்றனர் இதனால் மாணவர்களின் குழந்தைகளின் உளவுறன் மற்றும் உடல் நிலை என்பன பாதிக்கப்படுவதுடன் செயல்திறன் வளர்ச்சியும் பாதிக்கப்படகின்றது.

கோதுமை மா மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர் ஏற்றத்தை அடைவதால் சாதாரண அன்றாடம் காச்சிகளின் உணவுத் தேவைகள் பாதிக்கப்படும் இதனால் அரசாங்கம் உடனடியாக கோதுமை மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *