குறைந்தளவிலான விவசாயிகளே இயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர்-ஐங்கரநேசன் கவலை!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத் தோட்ட போட்டியை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றது.

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற உணவு நெருக்கடி,இரசாயன உரங்களினால் உணவு நஞ்சாக்கல் இவற்றினை கருத்திற்கொண்டு ஆரோக்கியமான முறையில் இளைய சமூதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணாக்க உழவர் திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாணவர்களுக்கு 10 வகையான விதைகள் உள்ளடங்கிய விதைப்பொதிகளும் ,குறிப்பேடுகளும் வழங்கி இருக்கின்றோம்.ஏராளமானோர் ஆர்வத்தில் கலந்துள்ளார்கள்.

விவசாயிகள் இரசாயன உரங்களை பயன்படுத்த பழக்கப்பட்டவர்கள்.இதில் மிகக்குறைந்தளவிலான விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள் .எனவே இளைய சமுதாயத்தினை இயற்கை விவசாயத்தின்பால் திரும்ப வைக்கலாம் என்ற நம்பிக்கை .இதனால் அவர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

ஆரோக்கியமான ,நஞ்சற்ற உணவு ,உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகின்ற பொழுது அதிலிருந்து மீட்சி அவர்களின் சிறிய பசுங்காரங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும்.-என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *