இலங்கையில் செப்டெம்பர் 3ஆம் திகதி பொலிஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. இம்முறை 156வது தேசிய பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக ஒரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவகையில் அட்டன் தலைமையக பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று (03.09.2022) அட்டன் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
இங்கு சுமார் 100 பேரிடம் இருந்து இரத்தம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்கள் இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.
இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
மேலும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நபர்களை பதிவு செய்ததோடு, உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.





பிற செய்திகள்
- உச்சத்தை தொட்டது பாணின் விலை! – வெளியானது அறிவிப்பு
- கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமை! – பிரதமர்
- உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல்! – பளையில் சம்பவம்
- சீன உரக் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய நடவடிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka