தொடரும் குழப்பநிலைகள்:டளஸ் பக்கம் சாயும் மொட்டுக்கள்!

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான உறுப்பினர்கள் குழுவில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் பல உறுப்பினர்கள் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இவர்கள் குழுவில் இணைய உள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக இருந்த டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தனர்.

புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கான பூர்வாங்கத் திட்டங்களை இக்குழு தயாரித்துள்ளது, நேற்றையதினம் மாலை தனி அலுவலகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *