மட்டக்களப்பில் மீன் விக்க சென்றவரை தூக்கியடித்த யானை !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபைந்த கல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (3) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கிண்ணயடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து மீன்களை எடுத்து வந்து புலிக்குடா பகுதிக்கு விற்பனை செய்ய சென்ற போது யானை தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *