
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷக்கு மக்கள் கோட்டா கோ ஹோம் என்று மட்டுமே கூறினார்களை தவிர சிங்கப்பூர் செல்லவோ, தாய்லாந்து செல்லுங்கள் என்றோ கூறவில்லை என சுதந்திர பாதுகாவலர் அமைப்பின் தலைவர் ஷிராந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று விடியற்காலை முன்னாள் ஜனாதிபதி கோடாபய நந்தசேன இலங்கைக்கு வந்துள்ளார். அது நமக்கு நன்கு அறிந்த விடயம். வரலாறு காணாத அளவுக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் சீரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நாட்டை வீணடித்துள்ளனர்.
உண்மையில் நாட்டில் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விடயம் நாட்டில் தனிமனிதனாக பயத்தை உருவாக்கி உள்ளார் என்றே கூறலாம்.
அன்று வெளிநாடுகளில் இருந்து வந்த போது ஆட்சி சிறப்பாக இல்லை என்று
ஆனால் இன்று நாட்டின் நிலை.
இங்கு போராட்டத்தில் கோட்டா கோ ஹோம் என்று கூறினாலும் அங்கு பாராளுமன்றத்திற்கு சென்றால் அங்கு கைகோர்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கோட்டபாய ராஜபக்ஷ தவறு செய்தால், பெசில் ராஜபக்ஷ தவறு செய்தால் அவர்களிற்கான வழக்குகள் எங்கே? இதன் மூலம் ரணில் ராஜபக்ஷவின் ஆதரவு நன்கு தெரிகிறது.
அதே போல எல்லா போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கை அவர்களை தாக்குவதும் அடிப்பதும் கண்ணீர் புகை வீசுவதுமே காணப்படுகிறது.
ஒருவராவது இவ்வாறு போராடும் மக்களோடு இணைந்து நீதிக்காக யாராவது செயற்பாடுகிறார்களா இல்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் கூறுவது நாங்கள்தான் நன்றாக செய்தோம் என்று ஆனால் அனைத்து துறைகளும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாதா?ஏன் இவ்வாறு போராட்டம் மேற்கொள்ளும் போது இணையுங்கள் மக்களுடன் இணைந்து நாட்டிற்காக போராடுங்களே இதனால் என்ன குறைந்துவிடுவீர்கள்?என தெரிவித்தார்.
அதே போல டொலர்கள் பற்றாக்குறை IMFஇனால் 2.9 பில்லியன் டொலர்கள் கிடைக்க பெற உள்ளது ஆனால் இவர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள் கொள்ளையடிக்காவிடின் இன்று கடன் வாங்க தேவையில்லை
எனவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந் நாட்டில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்