புத்தளம் மாவட்ட இளைஞர்களுக்கு கொரியாவில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இப்பொழுது ஓரளவு இலங்கை மீண்டு வருகிறது.
எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரம் இன்னமும் உயர்வடையவில்லை. இன்னும் இலங்கை மக்களில் பெரும்பாலானோர் பொருளாராத நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கொரியாவில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கொரிய மொழி தெரிந்த இளைஞர்கள் அந்த நாட்டில் உயர் தொழிலுக்கு செல்லக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், கொரிய மொழி தெரியாதவர்களுக்கு Carpenter, Welding போன்ற தொழிலுக்கும் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மேற்படி நாட்டிற்கு செல்ல ஆர்வமுள்ள புத்தளம் மாவட்ட இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுடைய புத்தளம், வான் வீதியிலுள்ள அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 0322266024 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
