யாழில், வீதியில் கண்டெடுத்த நகையை பொலிஸார் ஊடாக உரிமையாளரிடம் வழங்கிய 3 இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!

யாழ்.மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தான் நிலத்தில் கண்டெடுத்த கைச்சங்கிலியை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்து பொலிஸார் ஊடாக அதனை உரிமையாளரிடம் கையளித்த இளைஞனை பலரும் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, மாகியப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் பயணித்துக் கொண்டிருந்த சங்கானை பகுதியைசேர்ந்த ச.சபேஷ்(வயது 32) ர.றெபீகன் (வயது 20), ம.கோகுலன் (வயது 25) ஆகியோர் மாகியப்பிட்டி பகுதியினூடாக நிலத்தில் விழுந்து கிடந்த இரண்டு பவுன் கைச்செயினை அவதானித்து அதனை எடுத்தச் சென்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தனது நகையை தவறவிட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மானிப்பாய் பொலிசார் குறித்த நபரை அழைத்ததோடு நகையை கண்டெடுத்தவர்கள் மூலமாகவே தவறவிடவரிடம் நகையை கையளிக்க ஒழுங்கினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மானிப்பாய் பொலிசார் குறிப்பிட்ட மூன்று இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அண்மைகாலமாக யாழ்பாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்

இம்மூன்று இளைஞர்களினதுப் செயற்பாடு முன்னுதாரணமாக கொண்டு பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *