யாழில் இலவச ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகள் ஆரம்பம்! (படங்கள்,வீடியோ இணைப்பு)

இளைஞர் யுவதிகளிடையே ஆங்கில மொழி புலமையை விருத்தி செய்வதற்காக இந்து பொளத்த கலாச்சார பேரவையினால்  இலவச ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக இலவச ஆங்கில பாடநெறி யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களையும் இணைக்கும் வகையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த ஆங்கில வகுப்புகள் கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்களுக்கு யாழில் உள்ள வட மாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் அலுவலகத்தில் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் கலந்துகொண்டதுடன் ஆங்கிலபாட ஆசிரியர் ம.சுமெஷனும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வு தொடர்பில் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த இந்து பெளத்த கலாச்சார பேரவையின் செயலாளர் தேசமானிய இராமச்சந்திரன்,

இந்து,பௌத்த கலாசாரப் பேரவை – வடக்கு மாகாணம் தலைமைக் காரியாலயத்தில் இன்று புதிய ஆங்கில வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான விஷேட ஆங்கில வகுப்பொன்றை நாங்கள் இலவசமாகக் கற்பிக்கின்றோம்.

இந்த கற்கைநெறிக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு முதல் 3 மாதங்கள் ஆங்கிலமும் ,அதனைத்தொடர்ந்து யப்பான் ,கொரியா ,சீனா ,ஜேர்மன் போன்ற மொழிகளை இலவசமாகக் கற்பித்து அந்த நாடுகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடாக அவர்களின் அனுமதியுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக வழிகாட்டுகின்றோம்.

இந்து,பௌத்த கலாசாரப் பேரவையில் பல பேர் கற்றுள்ளார்கள் .அத்துடன் நிறைய பேர் வேலைவாய்ப்பினை பெற்று இருக்கிறார்கள்.வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த சேவையினை தொடர்ந்து வருகிறோம் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *