
நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு இன்னும் கால தாமதமாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள சிலருக்கு எதிரான ஆட்சேபனைகள், அமைச்சரவை நியமனத்தை தாமதமாக்குவதாக அறியமுடிகிறது.
எதுஎவ்வாறாயினும் , திங்கட்கிழமையன்று (05) இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்றும் சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்காக பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பிக்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் அக்கட்சி சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
பிற செய்திகள்