அடைக்கலம் கோரி நித்தியானந்தா கடிதம் எழுதவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு

கொழும்பு, செப். 3: பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதி, மருத்துவ புகலிடம் கோரியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, அங்கிருந்து தப்பிச் சென்று கைலாசா எனும் நாட்டை உருவாகியுள்ளதாக கூறப்படும், சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில், தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *