நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பெருந்தோட்ட மக்கள் கோதுமை மா கொள்வனவில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் தற்போதுகோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன்காரணமாக அதிகளவில் அரிசியை கொள்வனவு செய்வதாக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கோதுமை மா விலை மாஃபியா விடயத்தில் அரசாங்கம் முன்னிலையாகாவிட்டால், உணவக தொழிற்துறையில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மாத்திரமே கோதுமை விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு மேலதிக பல தரப்பினர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்து தாங்கள் எண்ணிய விலைக்கு அதனை விற்பனை செய்கின்றனர்.
தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
தற்போது பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்குமாயின் கொத்து ஒன்றின் விலை எந்த அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இந்த மாஃபியா விடயத்தில் அரசாங்கம் முன்னிலையாகி தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் உணவகங்களை மூட நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்