எரிபொருள் இல்லாத நிலையில் தொழிலுக்கு செல்ல முடியவில்லை என யாழ் மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் இல்லாத நிலையில் 6 மாத காலமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தற்போது சுருக்குவலை பிரச்சினை உருவாகியுள்ளது. இதனால் கிடைக்கும் எண்ணையில் மீன்பிடிக்க சென்றாலும், அந்தப் பணம் கிடைக்குமா எனும் அச்சம் தோன்றுகிறது.
சுருக்குவலை. உள்ளூர் இழுவை படகுகள் மூலம் எமது கடல் வளங்கள் அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறன. இது தொடர்பில் கடற் தொழில் அமைச்சர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அறிவித்த வேளையில் நாங்கள் தடுப்போம் என கூறினர்.இன்றுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
அதேவேளை சுருக்கு வலை 3.30 இஞ் பயன்படுத்தலாம் என சங்கங்கள் அனைத்தும் இணக்கம் தெரிவித்த வேளையில் அந்த நடைமுறையும் மீறப்படுகிறது. இதனால் பாரம்பரிய மற்றும் சிறு வலை தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.
நாடு பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ள நிலை காணப்படுகின்றது. கடற் தொழில் சமூகத்திற்கு நல் வழியை பெற்றுத் தாருங்கள்.
இந்தியன் இழுவை படகின் வரவு போராட்டங்களினால் இல்லாமல் இருந்ததது. ஆனால் அதைவிட அதிக சட்ட விரோத செயல்கள் காணப்படுகின்றன என்றனர்.
பிற செய்திகள்