ஸ்ரீலங்கன் விமான சேவை நஷ்டம் என்பதை ஏற்க முடியாது! – வெளியான அறிக்கை

விமான நிலையம் மற்றும் விமான சேவை (ஸ்ரீலங்கன்) நிறுவனம் நட்டமடையும் 5 நிறுவனங்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.

அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் சுமையற்ற வகையில் தேசிய பொறுப்பினை நிறைவேற்றுகிறோம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை ஸ்ரீ லங்கன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பறிமாற்றம் செய்யப்படுகின்றன. 05 அரச நிறுவனங்கள் நாளாந்தம் 7.76 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் விமான சேவை (ஸ்ரீலங்கா) (தனியார்) நிறுவனம் நட்டமடையும் 5 நிறுவனங்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் சேவைகள் நிறுவனம் அரசாங்கத்திற்கு சுமையான இருப்பதாக வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நிறுவனம் அரசாங்கத்திற்கும், நாட்டுக்குளம் சுமையாக செயற்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா), (தனியார்) நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும். சர்வதேச தரப்படுத்தலுக்கமைய நாட்டில் விமான சேவையினை முன்னெடுக்கிறோம்.

லன்டனில் அமைந்துள்ள சர்வதேச விமான சேவைகள் தரப்படுத்தல் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தரப்படுத்தலை உயர் நிலைப்படுத்தியுள்ளது.

அதற்கமைய பூகோள பிராந்திய – இந்தியா, தென்னாசியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 5ஆவது நிலைக்கு தரப்படுத்தியுள்ளது.

2919ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மற்றும் கொவிட் -19 பெருந்தொற்று பரவலுக்கு முன்னர் எவ்வித நிதி நெருக்கடியும் எதிர்கொள்ளவில்லை. பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிய காரணிகளினால எமது நிறுவனத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டது.

இருப்பினும் சிறந்த முகாமைத்துவ திட்டத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 2021ஆம் ஆண்ட 3967மில்லியன் இலாபத்தையும், 2022ஆம் ஆண்ட 16,715 இலாபத்தையும் அடைந்துள்ளது.

எமது நிறுவனம் முறையான திட்டமிடலுக்கமைய நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்கிறது.அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் சுமையற்ற வகையில் தேசிய பொறுப்பினை நிறைவேற்றுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *