பொலிஸ், நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை! – ஜனாதிபதி

ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் அது சட்டத்தின் ஆட்சியே இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை சட்டமான அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 156வது பொலிஸ் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசு என்ற இயந்திரத்தில் பொலிஸும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய அவர் இவ்விரண்டையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *