
இந்த வருட இறுதிக்குள் இருபதாயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற அரசின் முடிவின்படி, ஒரேயடியாக அரசுப் பணியில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.
வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் தவிர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயது பூர்த்தியாவதற்கான சுற்றறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.