
கொழும்பு,செப் 04
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“சில்லறைக்காக ஆன்மா ஏலம் விடப்பட்டுள்ளது. சில தவளைகள் மறுபுறம் குதித்து, நாங்கள் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்கவே பக்கங்களை மாற்றுகிறோம் என கூறினார்கள்.
ஆனால் பொது மன்னிப்பில் விடுதலையான ரஞ்சனால் அரசியல் செய்ய முடியாது. இவர்கள் தாம் சொகுசுகளை அனுபவிப்பதற்காக ரஞ்சனை விற்றார்கள் என்பதே உண்மை.
இப்போது நாங்கள் அந்த அமைச்சரவையில் இருந்தால் எப்படி இருக்கும் ? ஆடை அணிந்து கொண்டு ரஞ்சனிடம் எப்படி செல்வது? இதே நேரம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தால் இப்படி கீழ்த்தரமான வேலைகளை செய்திருக்க மாட்டார். பணப் பையைக் காட்டியவுடன் கட்சி தாவக்கூடிய ஒருவர் இருக்கிறார்.
அந்த கட்சி தாவியவர்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்து கொள்ள பட மாட்டார்கள் என்பதை இங்கு கூற விரும்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.