தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டு வந்த நீர்க்கட்டணங்களை இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபா 1200/- வழங்கப்படுகிறது.
வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகள் கஸ்டத்தை எதிர்கொள்வதாகவும், இந்த கட்டணங்களை அரசாங்கங்கம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பா.உ. இம்ரான் மகரூப் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான அவரது உரையின் போது அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ்களுக்கு QR முறையை ஊடாக 50 லீட்டர் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும், அதேபோன்று முச்சக்கரவண்டிகளுக்கும் 5 லீட்டர் போதாமையால் இந்த நிலைமையினை கருத்திற்கொண்டு அம்பியூலன்ஸ், ஆட்டோகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
பிற செய்திகள்