நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனின் உங்களுடைய ஆட்சியில் கூட்டமைப்பை இணைக்காதீர்கள்! ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

அடுத்து வரும் தேர்தலில் நான் போட்டி போடப்போவதில்லை என்பதை பகிரங்கமாகச் சொல்லிக்கொள்கின்றேன். ஆனால் அடுத்த தேர்தலில் என்னுடைய தமிழர் விடுதலைக் கூட்டணியினை தலைமை தாங்கி இயக்கி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 22 ஆசனங்களையும் பெற்றுக்கொடுப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரவித்தார்.

மேலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டவை வருமாறு,

ரணில் விக்கிரமசிங்க சகல அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசமைத்தல் என்னும் முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை குறிப்பிட்டு ஆதரவு கோரியிருந்தார்.

நீங்கள் அமைக்க இருக்கும் அரசில் இணையுமாறு பெயர் குறிப்பிட்டு சில அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்று அறிந்திருந்தும், வன்முறையில் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்பின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையேனும் பெறமுடியாமல் போனமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும்.

நான் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகமாக இன்று வரை செயல்படுவது என்பதனை அறியாதது அல்ல.

2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 36000 வாக்குகள் பெற்று, ஒன்பது பேருக்கு தலைமைதாங்கி பாராளுமன்றம் சென்றபோது, அதே தேர்தலில் நீங்கள் 109 உறுப்பினர்களுடன் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம மந்திரியாக பதவியேற்றிருந்திர்கள்.

பொருத்தமான காரணமின்றி 2004ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது எமது பதவிக் காலம் மேலும் நான்கு ஆண்டுகள் இருக்கத்தக்கதாக பதவிகளை இழந்தோம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆராய்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களுடைய சர்வகட்சி ஆட்சி பிரேரணைக்கு ஆதரவு வழங்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால விரும்பத்தகாத, தமிழ் மக்களை பெரிதும் பாதித்த சில நடவடிக்கைகளால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தங்கள் முயற்சிக்கு உதவும் என எவரும் நம்பவில்லை.

2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கோட்பாடுகளை மீறி வேறு எந்த கட்சியினரையும் எதுவித பங்கும் எடுக்கவிடாது முட்டுக்கட்டை போட்டது அனைவரும் அறிந்ததே.

தேர்தல் காலத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் மிக மோசமாக இருந்தன. சட்டத்திற்கு விரோதமாக பலவிதமான அக்கிரகங்களில் ஈடுபட்டு மக்களை மிரட்டியும் மாற்றுக் கட்சிகாரர்களை எதுவித பணியிலும் ஈடுபடவிடாமலும், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமலும், சுருங்கக்கூறின் தங்களை சார்த்தவர்களை தவிர வேறு எவரையும் வாக்களிக்க விடாது திருட்டு வாக்குகள் போட்டு ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைத்தனர்.

அத் தேர்தலில் அவர்கள் பெற்ற 22 ஆசனங்களும், எந்த விதத்திலும் ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை.

இவர்களின் செயல்பாட்டை ஒத்த எந்தச் செயலும் உலகளாவிய ரீதியில் ஏற்படக் கூடியதாக இல்லை. இந்த நிலையில் ஆறு ஆண்டுகள் நீடித்தது மட்டுமல்ல, தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் ஒரே நடைமுறையை கையாண்டதால் இன்று வரை அவர்களின் பிரதிநிதித்துவம் ஏற்புடையதாக இல்லை.

மேலும் இவர்களுடைய அதரவுடன் கடத்தாலும் காலம் செல்லுபடியற்றவையாக கணிக்கப்படுவதே நியாயமாகும்.

ஒரு ஐனநாயக நாட்டிலும் இது போன்ற தேர்தல் குளறுபடிகள் நடந்ததாக வரலாறு இல்லை. அத்துடன் பூரண விசாரணை நடத்தப்படுமாக இருந்தால் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பிரைகள் தேசதுரோகம் உட்பட பல்வேறு தரப்பட்ட குற்றங்களுக்கு ஆளாவது மட்டுமல்ல நீண்டகால சிறையில் இருக்க வேண்டிய பாரதூரமான குற்றமுமாகும்.

2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ம் திகதி நாடு ஜனநாயக பாதைக்கு திரும்புவது தடுக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகம் வட பகுதிக்கு இன்னும் திரும்பவில்லை. பலர் உந்தமர்கள் போல் இன்று தம்மை காட்டிக்கொண்டிருக்கின்ற போதும் தங்கள் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆக வேண்டும்.

தாங்கள் நீதியை எம் நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என உறுதிகூர்ந்தால் உங்களுடைய ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைக்காது உடனடியாக ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து நடந்தேறிய அக்கிரமங்களுக்கு நீதி வழங்குங்கள் என அப்பாவி மக்கள் சார்பில் வேண்டுகின்றேன் .

முறைதவறி இவ்வாறு அரசியலில் ஈடுபட்டவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தால் சிறப்பாக இருக்கும். – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *