மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனை

கொழும்பு, செப் 04

மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனையை, இந்தமாத இறுதிக்குள் அமைச்சரவையில் முன்வைப்பதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையை, மறுசீரமைப்பு செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவுடன், இன்று காலை கலந்துரையாடியதாக, ட்விட்டர் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவானது, தற்போது வரையில், அபிவிருத்தி முகவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பங்காளர்கள் ஆகியோரைச் சந்தித்தள்ளது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளையும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவையும், இந்த வாரம் குறித்த குழு சந்திக்க உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *