பத்திரமாக இருக்கிறது, புத்தர் சிலை தொடர்பில் வந்த முக்கிய தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் பொது இலக்கத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்களை தன்னிடம் வைத்திருக்க பயமாக இருக்கிறது என்றும் அதனை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் அழைப்பெடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் பத்திரமாக இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்த நபர், ஜனாதிபதியின் செயலாளரிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அழைப்பின் மூலம் தகவலைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, ஜனாதிபதியின் செயலாளரிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளை செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *