
காலத்திற்கு காலம் இலங்கையில் சில விடயங்கள் பேசு பொருளாக இருந்து வருகின்றது. தற்போது மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது .
வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கே. குணரட்ணம் தெரிவிக்கையில்,
இறுதியாக ஏற்பட்ட எரிபொருள் பிரச்சனை ஆட்சியாளர்களை விரட்டியது.
அதே போன்று வெகு விரைவில் பாணுக்கு தட்டுப்பாடு நிலவும், பாண் அதிக விலைக்கு விற்கப்படும் நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 3 மாதங்களுக்கு முதலே கூறி இருந்தேன்.
இதற்கமைய, மாவின் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் 9 மணி அளவில் கொழும்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது அமுலுக்கு வரும் தருவாயில் சில அரச மட்டத்தினர் என்னுடன் உரையாடி, எனது முடிவை கேட்டார்கள்.
அதாவது பிரிமா நிறுவனத்துடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. எங்களது தேவைக்கு 55% மா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 70% வீதமான தேவை எங்களுக்கு இருந்தது. மேலதிகமான 15% பிரத்தியோக மாவை எமது அங்கத்தவர்கள் வெளியில் இருந்து எடுத்து வந்தார்கள்.
மேலும், சில பொருட்களின் விலை அதிகரித்தாலும், பாணின் விலையேற்றம் அதிகரிக்குமாக இருந்தால் அதனை குறைப்பது சற்று கடினமானதாகும். பாணின் விலையேற்றம் கிராமப்புற அடித்தள மக்களை பெரிதும் பாதிக்கும்.
ஆகவே, மக்களின் நலன் கருதி பாணின் விலையை 200 ரூபாய்க்கு வழங்குவதற்கு கூட்டுறவு வெதுப்பக சங்கத்தினர் உறுதியாக இருக்கின்றார்கள்-என்று கூறினார்.
பிற செய்திகள்