
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி ஆட்சி முறையை உள்ளடக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று சட்டத்தரணிகள், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள வாராந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
சமஷ்டி ஆட்சி முறையிலான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கனகேஸ்வரன் சந்திரஹாசன் மற்றும் சுமந்திரன் ஆகிய சட்டத்தரணிக்ள தற்போது அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சட்ட வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சட்ட நல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் முறையாக தனது சட்டத்தரணிகளை அனுப்பியுள்ளது என அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சட்ட வல்லுநர்கள், அரசியலமைப்புச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்கி இருந்ததாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள், அமெரிக்காவில், பிரித்தானியா மற்றும் கனேடிய துதுவர்களை சந்தித்து சமஷ்டி ஆட்சி முறை பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
