இலங்கைக்கு இந்தியா உலர் உணவு நிவாரண உதவி!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமான பாரிய உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் அயல் நாடான இந்தியா இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் பல உதவிகளை அளித்து வருகின்ற சூழல் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு உலர் உணவு பொதிகளை அனுப்பி வருவதாகவும், இது வரை சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான உலர் உணவு பொதிகளை இலங்கை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஐ.நாவிற்கா இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் “ரூச்சிர கம்போஜ்” தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது இந்தியா இலங்கையை தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும், இலங்கையின் உடனடி தேவைகளை சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *