நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வுகளை நாளை முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் 10.30க்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மேலும் நாளை முற்பகல் 10.30 முதல் 10.45 வரை சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *