பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை-ருவான் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை கொடுப்பது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.தேகவின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற மத வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதோடு ராஜபக்சே அரசியலில் இருப்பதா இல்லையா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *