
தங்கள் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட பொருட்களை திருப்பித் தராத சில அரசாங்க அதிகாரிகள் அவற்றை திருப்பி தருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளனர்.
கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட விலையுயர்ந்த இலத்திரனியல் பொருட்களை திரும்பத் தராத சுமார் 30 பேரின் பெயர்கள் அண்மையில் ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டன.
முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதன்போது சில அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அரசாங்கத்துக்குச் சொந்தமான இலத்திரனியல் பொருட்களை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்