இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

தினம்தோரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் இழக்கும் அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி என்பதை நரக ஆட்சி என்று ஆட்சிக்கு வந்த கோட்டபாய ராஜபக்‌ஷ தன்னுடைய பாதி பதவிக்காலத்திலே ஊழல் ஆட்சி என்பதை மக்கள் உணர்த்திய நிலையில் நாட்டை விட்டு ஒடியும் இடை நடுவில் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சியோ இன்று தொடர் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த ஆட்சியில் நாளுக்கொரு விலை! இன்றோ இந்த ஆட்சியில் நாளுக்கொரு கொலை!என தொடர்கின்றது.பொருளாதார நெருக்கடிக்குள் இந்த நாடு பயங்கரமான சூழ்நிலையினை உருவாக்கி திசை திருப்ப பார்க்கின்ற அரசாக ரணில் அரசு திகழ்கின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியுன் போதே பல கொலைகள், கலவரம் தலைதுக்கப்பட்டுள்ளது என்பது வரலாறு ஆகவே இது போன்ற துப்பாக்கி கலாச்சரத்தை நிறுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது 18 அந்தஸ்து அமைச்சர்களும் 22 இராஜங்க அமைச்சுக்களுமான 40 பேரை கொண்ட அரசு மேலும் 35 அமைச்சினை உருவாக்கி 75 ஆக உயர்த்த முன்வந்துள்ளது. இவர்களுடைய ஆட்சிக் கதிரையை தக்கவைப்பதற்கு அமைச்சு பதவிகளை வழங்கி அழகு பார்க்கின்றார்கள்.

1948ல் ஆங்கிலேயர் ஆட்சிமுறை வெளியேறி சென்றிருந்தும் ஆங்கிலேயர் பொருளாதர முறை இன்னும் மாற்றம் பெறமுயற்சிக்கவில்லை எந்தவொரு அரசும் என்பதை அடித்து கூறுவேன்.

இலங்கையில் இருந்து மூலப்பொருளான இறப்பரை சீனாவிற்கு அனுப்பிவிட்டு முடிவு பொருளாக டயர் பல பல்வகை இறப்பர் பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கை வேடிக்கையான ஒர் விடயமாகும்.

அதேபோன்று இன்று எங்களை விட சிறிய நாடான மாலைதீவில் மாசி உற்பத்தி, டீன் மீன் உற்பத்தி என்று தங்களுடைய ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துகிறார்கள்.

ஆனால் தற்போது உள்ள அமைச்சர்களினால் நடைபெறுகின்ற நன்மைதான் என்ன இன்றும் நாம் கடல் வளத்தினை கொண்டும் டீன் மீன் முதல் கறுவாடு வரை அந்நிய நாடுகளை நம்பியுள்ளோம்.

நெழிவிழந்து கிடக்கும் இலங்கை திருநாட்டை கட்டியெழுப்ப நாட்டுமக்கள் அர்ப்பணிப்புடன் இருக்கும் இன்நிலையில் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியில் இருப்பை உறுதிபடுத்த முனைகின்றனர்.

அரசியல் வாதி என்பவர் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடை தரகர் ஆவார்.மக்களுடைய பிரச்சனையை அரசுக்கும் அதற்குரிய தீர்வினை மக்களிடமும் வழங்கும் நபரே சிறந்த மக்கள்பிரதிநிதி!ஆனால் இன்றோ தரகர்களுக்குரிய தரகு பணத்தினை பெறுவதோடு சரி அவர்களுடைய வேலை முடிகின்றது.

அபிவிருத்தியடைந்த நாடுகளே தங்களுடைய அமைச்சுக்களை மட்டுப்படுத்தியுள்ள போதும் பொருளாதரத்தில் வீழ்ந்து கிடக்கும் சிறிய இலங்கை நாட்டுக்கு 75 அமைச்சு பதவி தேவையாகவுள்ளது.

ஆகவே மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்களை கொண்டு நாட்டை மீட்டு எடுக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களையும் மாவட்டத்தில் உள்ள வளங்களை கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதர முறையை முன்வைக்கும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவினை வழங்கலாம் அதைவிட்டு விட்டு வேறுமனே ஆட்சி கதிரைக்காக மக்கள் வரிபணத்தில் உங்கள் ஆட்சியை வழிநடத்த வேண்டாம் எனக்கூறிக் கொள்கின்றேன் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *