மட்டு நீர்ப்பாசன திணைக்களத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை!(படங்கள் இணைப்பு)

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அரச திணைக்களங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு திணைக்களங்களில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களமாக தங்களது அலுவலக வளாகத்திற்குள் தோட்டப் பயிர்செய்கையை திறம்பட மேற்கொண்டு வருகின்றது.

திணைக்களத்தின்  தலைவர் ந.நாகரெட்ணம் தலைமையில் வெற்றிகரமான ஒரு பயிர்செய்கை பராமரிப்பு அலுவலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது.

இங்கு வாழை, பயத்தை, கீரை, வெண்டி, மஞ்சள், பொண்னாங்கேணி, கத்தரி, மிளகாய், பப்பாசி, நோக்கிட், புடோல் போன்ற தாவரங்களை பயிரிடப்பட்டு அதன் அறுவடை  வளங்களையும் அலுவலக உத்தியோகத்தர்கள் பங்கிடு செய்து பராமரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *