வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!

வீதி விதிமுறைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்டம் கல்முனையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது வீதி ஒழுங்கு தொடர்பாக மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தபட்டு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.

மேலும், வீதி விதிமுறைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வினை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *