ரணிலின் காரின் விலையுடம் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒப்பிடும் அனுர!

ஜனாதிபதி ரணிலின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் 191 மில்லியன் என்றால் அந்த வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் 191 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் என்றால் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நாட்டு மக்கள் ஒரு இறாத்தல் பாணை முன்னூறு ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் ஜனாதிபதியின் காரின் மதிப்பு எவ்வளவு? இப்படியான ஆட்சியாளர்கள் எப்படி மக்களின் துயர் உணர்வார்கள் என அனுர கேள்வி எழுப்புகின்றார் .

வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள்?

டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்?

இவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல். அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்றன.

இவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? என அனுர கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *