கிழக்கு பல்கலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆண் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்பாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வை அடுத்து, உயிர்நீத்தவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் 5 ம் திகதி இடம்பெற்ற வன்செயலின் போது வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில் சுமார் 176 இக்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *