பொது மனுக்கள் மீதான குழுவின் தலைவராக ஜகத் புஸ்பகுமார தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வுக்கான பொது மனுக்கள் மீதான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜகத் புஸ்பகுமாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன முன்மொழிந்ததோடு, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வழிமொழிந்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆரம்பக் குழுக் கூட்டத்தின் போதே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது பொது மனுக்கள் மீதான குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 120 (1) க்கு இணங்க தெரிவுக்குழு உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *