ஜெனிவா அமர்வு ஒன்றுக்கும் உதவாது – வீர வசனங்கள் வேலைக்கு ஆகாது!

ஜெனிவா அமர்வு ஒன்றுக்கும் பிரியோசனம் இல்லையென புதிய மாக்சிசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.சிந்திவேல் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அமர்வு தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

ஜெனிவா அமர்வு புதிதல்ல.வருடா வருடம் நடைபெறும் ஒரு கூட்டம் தான்.ஆரம்பத்தில் மனித உரிமைகளுக்கான அமர்வாக செயற்பட்டு வந்த குறித்த அமைப்பு தற்போது,வல்லரசு நாடுகளின் சார்பாக ஏதோ ஒரு விடயத்துக்காக அந்த அமைப்பு சார்ந்து நிற்கிறது.நடுநிலையாக நின்று செயற்படவில்லை.

நாட்டுக்கு நாடு வேறுபட்ட நியாயங்களை கொண்டு அந்த அமைப்பு செயற்படுகிறது.அமர்வு ஆரம்பிக்கப்படும் வேளை பலர் கிளம்பியுள்ளனர்.ஏதோ தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது என்று கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வளமை போன்று அங்கு தீர்மானம் நிறைவேற்றப்படும் ,பின்னர் அது அப்படியே சென்றுவிடும் .இப்படி தான் வருடா வருடம் நடிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எதுவும் கிடைவில்லை.யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகின்றது.

மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்.அமெரிக்கா விரும்பியதை போன்று இப்போது ரணில் ஆட்சிக்கு வந்து விட்டார்.

ஜெனிவா என்ற விடயத்தை பெரிது படுத்தி.வீர வசனங்கள் மற்றும் ஆக்ரோஷமான வசனங்களை அரசியல்வாதிகள் பேசி தமது வாகு வங்கிகளை நிரப்பிக்கொள்கின்றனர் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *