கொவிட் தொற்றினால் மேலுமொரு மரணம்

கொழும்பு,செப் 05

நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த நபர் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 42 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,218 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *