பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிட்டத்தட்ட 400 கோடி டொலர்கள் மதிப்பிலான உணவு , நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் , நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் ( பிபிசி ) அறிக்கைகள் மற்றும் அமைதி உருவாக்க நிதியத்தின் ( பிபிஎப் ) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறியதாவது : கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 400 கோடி ( 4 பில்லியன் ) டாலர் மதிப்பிலான உணவு , நிதி உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது . இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, இதன் மூலம் , உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறோம் . 2017 இல் நிறுவப்பட்ட இந்தியா – ஐ.நா வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியம் , ஐந்து ஆண்டு குறு காலத்தில் , இந்த நிதியம் 51 வளரும் நாடுகளுடன் இணைந்து 66 மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒரு துறையை உருவாக்கியுள்ளது .
மேலும்,உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து , தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியாவும் நிதி மற்றும் உணவு உதவிகளை வழங்கி வருகிறது . உணவு மற்றும் பொருட்கள் விநியோகச் சங்கிலிகள் அழிவால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்காக இந்தியா உதவிகளை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கணிசமான மானியங்கள் மற்றும் கடன்களை வழங்குவதன் மூலம் , தேவைப்படும் . நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் . மோதல்களுக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்கள் மூலம் நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் . இவ்வாறு அவர் தெரிவித்தார் .
அத்துடன் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவு வேறு எந்த நாட்டுக்கும் . இதுவரை வழங்கப்படவில்லை . இந்தியாவிலிருந்து கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் , உரம் , எரிபொருள் போன்றவற்றை இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது.
பிற செய்திகள்