மூதூர் மேன்கமம் சிறீ அபிராமி அம்மன் ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள் நேற்று (04) ஆரம்பமானது.
இந்நிலையில், இரண்டாவது தடவையாக நடைபெற்ற இந் நிகழ்வுகள் தொடராக 24 நாட்கள் நடைபெறவுள்ளது.
இன்று மண்டலா அபிசேகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவர் தமது கிராமத்திற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பமாக இது அமைவதாகவும் ஆலய கும்பாபிசேக விழாவில் கலந்து சிறப்பித்தமைக்கு கிராம மக்கள் சார்பாக நன்றிகளை அரசாங்க அதிபருக்கு தெரிவிப்பதாக இதன்போது ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
மேலும், விசேட பூஜை வழிபாடுகளிலும் அரசாங்க அதிபர் கலந்து சிறப்பித்தார்.


பிற செய்திகள்